டெல்லி: கன்வார் யாத்திரை விவகாரம் : கடை உரிமையாளர்களின் பெயர் எழுதும் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. உத்தரப்பிரதேசம், உத்தராகண்ட் மாநில அரசுகளின் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடைவிதித்தது. கன்வார் யாத்திரை பாதைகளில் கடை வைத்திருப்போர் தங்களது பெயர்களை எழுதி வைக்க வேண்டும் என்ற உத்தரவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆன்மிக யாத்திரையில் மதவெறுப்பை பா.ஜ.க. பின்பற்றுவதாக எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தன.