சென்னை: வங்கதேசத்தில் இருந்து முதற்கட்டமாக தமிழ்நாட்டைச் சேர்ந்த 44 மாணவர்கள் சென்னை திரும்பினர். சென்னை விமான நிலையம் வந்த 44 மாணவர்களை அமைச்சர் செஞ்சி மஸ்தான் நேரில் வரவேற்றார். நாளை 77 மாணவர்கள் சென்னை அழைத்து வரப்பட உள்ளனர் எனவும் வங்கதேசத்தில் இருந்து அவரவர் வீடு சென்று சேரும் வரை அனைத்து செலவையும் அரசே ஏற்கும் எனவும் அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார்.