தண்டையார்பேட்டை: புது வண்ணாரப்பேட்டை பூண்டி தங்கமாள் தெருவைச் சேர்ந்தவர் ஏழுமலை. ஸ்டண்ட் மாஸ்டரான இவர், நேற்று முன்தினம் நடிகர் கார்த்தி நடிக்கும் ‘சர்தார் 2’ படத்திற்காக சாலிகிராமத்தில் நடந்த சண்டைக் காட்சியில் பங்கேற்றபோது, சுமார் 20 அடி உயரத்தில் இருந்து படுகாயமடைந்த அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடல் புது வண்ணாரப்பேட்டை, பூண்டி தங்கமாள் தெருவில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதனையடுத்து நேற்று முன்தினம் இரவு நடிகர் கார்த்தி, ஏழுமலையின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி அவரது குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்துச் சென்றார்.
படப்பிடிப்பில் தவறி விழுந்து உயிரிழந்த ஸ்டண்ட் மாஸ்டர் உடலுக்கு நடிகர் கார்த்தி அஞ்சலி
previous post