திருவாரூர், ஜுலை 16: முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்தநாளையொட்டி திருவாரூர் நகராட்சி துவக்க பள்ளி குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகளை காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் துரைவேலன் வழங்கினார். முன்னாள் முதல்வரும், கல்வி கண் திறந்த கர்மவீரர் காமராஜரின் பிறந்தநாளையொட்டி கல்விவளர்ச்சி நாளாக கொண்டாடப்படுகிறது.
இதனை முன்னிட்டு திருவாரூர் ராமகே நகராட்சி தொடக்கப்பள்ளியில் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் தலைவர் துரைவேலன் தலைமையில் காமராஜரின் உருவபடத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் மாவட்டசெயலாளர் சிட்டு பாஸ்கர் , நகர தலைவர் அருள், சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் அண்ணாதுரை மற்றும் பொறுப்பாளர்கள் நடராஜன், மலைக்கனி, ஜீவானந்தம், பொன்பாலு உள்பட பலர் கலந்துகொண்டனர். மேலும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நோட்டு, புத்தகம் , பேனா, பென்சில் உட்பட நலத்திட்ட உதவிகளை மாவட்ட தலைவர் துரைவேலன் வழங்கினார்.