தொண்டி, ஜூலை 14: தமிழ்நாடு முஸ்லிம் மகளிர் பேரவை தொண்டி பேரூர் சார்பில் தெற்கு தெரு சமுதாய நலக்கூடத்தில், சமூக தீமையும் குழந்தைகள் வளர்ப்பும் என்ற தலைப்பில் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மகளிர் பேரவை மாவட்ட செயலாளர் செரிபா தலைமை தாங்கினார். சமிமா பானு வரவேற்றார். பாத்திமா வஜிஹா, முஸ்லிம் மகளிர் பேரவை மாநில துணை செயலாளர் நஜிமா பேகம் ஆலிமா குழந்தைகள் வளர்ப்பு பற்றி பேசினர்.
தமுமுக மாநில செயலர் சாதிக்பாட்சா, மமக மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ஜிப்ரி, தொண்டி பேரூர் நிர்வாகிகள் காதர், செயலாளர் மைதின் ஹம்மாது, பரக்கத் அலி, இபுராஹிம் முஸ்தபா, அப்துல்லா சலிம், ஜலால் மற்றும் தொண்டி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பேராசிரியை ரைஸ்லின் பாத்திமா நன்றி கூறினார். பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.