செய்யாறு: செய்யாறு அருகே சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய சிறுவன் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த மரம் வெட்டும் தொழிலாளியின் 13 வயது மகள். இவருக்கு அதே கிராமத்தை சேர்ந்த 16 வயது உறவினர் மகனுடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் நெருங்கி பழகி வந்துள்ளனர். பின்னர் இருவரும் ரகசியமாக திருமணம் செய்துகொண்டனராம். இந்நிலையில் சிறுமிக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் சிகிச்சை பெற அங்குள்ள மருத்துவமனைக்கு பெற்றோர் அழைத்துச்சென்றனர்.
அப்போது சிறுமி 3 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து அவர்கள் மாவட்ட குழந்தைகள் நல மையத்திற்கும், பெண்ணின் பெற்றோருக்கும் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மகளிடம் விசாரித்தபோது, மாமன் உறவுமுறையான 16 வயது சிறுவன் ரகசியமாக தன்னை திருமணம் செய்து கர்ப்பமாக்கியதாக தெரிவித்தார். இதுகுறித்து சிறுமியின் தாய் செய்யாறு அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார், சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய சிறுவன் மீது, குழந்தை திருமண தடுப்பு பிரிவு, போக்சோ பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து தேடிவருகின்றனர்.
மாமன் உறவுமுறையான 16 வயது சிறுவன் ரகசியமாக தன்னை திருமணம் செய்து கர்ப்பமாக்கியதாக சிறுமி தெரிவித்தார்