சென்னை : அங்கீகாரம் இல்லா நில பத்திரப்பதிவுக்கு தடை விதிக்கும் பத்திரப்பதிவு சட்டத்துக்கு (22 ஏ2) தடை விதிக்க கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக தலைமைச் செயலர், வணிகவரித்துறை, பத்திர பதிவுத்துறை செயலர் மற்றும் தலைவர் பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. விருதுநகரைச் சேர்ந்த ராமராஜ் என்பவர் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.