சென்னை : அனைத்து சவால்களையும் முறியடித்து விக்கிரவாண்டி தொகுதியில் திமுக வெற்றி பெற்றுள்ளது என்று ஆர்.எஸ்.பாரதி பேட்டி தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர், “இடைத்தேர்தல் நேரத்தில் எந்த அரசுக்கும் ஏற்படாத சவால்கள் திமுக அரசுக்கு ஏற்பட்டது. எந்தவொரு அரசியல் கட்சிக்கும் ஏற்படாத சோதனையிலும் மக்கள் திமுகவை ஆதரித்துள்ளனர். சாதியை தூண்டிவிட்டு பேசியவர்களின் முகத்தில் விக்கிரவாண்டி மக்கள் கரியை பூசியுள்ளார்கள்,”இவ்வாறு பேசினார்.