மதுரை: பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்த நியோமேக்ஸ் நிதி நிறுவன வழக்கு விசாரணையை 15 மாதங்களில் முடிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. வழக்கை 15 மாதங்களில் முடித்து சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய பொருளாதார குற்றப்பிரிவு போலீசாருக்கு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர் | முழுமையாக அறிந்து புகார் தரும் வகையில் பெரிய அளவில் விளம்பரம் செய்ய பொருளாதார குற்றப்பிரிவு போலீசுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.