ஒசூர்: நல்லூர் சோதனைச் சாவடியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தியதில் கணக்கில் வராத ரூ.2.89 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஒசூர் -பாகலூர் சாலையில் நல்லூர் பகுதியில் போக்குவரத்து துறை சோதனைச் சாவடி செயல்பட்டு வருகிறது. வெளி மாநிலம் செல்லும், தமிழகம் வரும் வாகனங்களுக்கு கூடுதல் வரி வசூல் என்ற புகாரை அடுத்து சோதனை நடைபெற்று வருகிறது.
ஒசூர் அருகே சோதனைச்சாவடியில் ரூ.2.89 லட்சம் பறிமுதல்
previous post