ஸ்ரீவில்லிபுத்தூர்: விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியில் உணவு பாதுகாப்பு அலுவலராக இருப்பவர் சந்திரசேகரன் (58). இவர் கடந்த 18ம் தேதி கோவிந்த நகர் காலனியில் உள்ள பெட்டிக்கடையில் புகையிலை விற்பனை செய்யப்படுகிறதா என சோதனை செய்துள்ளார். பின்னர் அந்த கடை உரிமையாளர் குருசாமியிடம் லைசென்ஸ் இல்லாததால் ரூ.1,500 லஞ்சம் கேட்டுள்ளார். இதுகுறித்து புகாரின்படி லஞ்ச ஒழிப்பு போலீசார் வழங்கிய ரசாயன பவுடர் தடவிய பணத்தை நேற்று உணவு பாதுகாப்பு அலுவலர் சந்திரசேகரனிடம் குருசாமி கொடுத்தார். அப்போது மறைந்திருந்த போலீசார் சந்திரசேகரனை கைது செய்தனர்.