தொண்டாமுத்தூர்: கோவை பாரதியார் பல்கலைக்கழக விடுதியில் தங்கி, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த சுபாஷ் என்ற மாணவர் உடற்கல்வியியல் துறையில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவருடன் அந்த துறையை சார்ந்த 6 மாணவர்களும் ஒரே அறையில் தங்கியுள்ளனர். கடந்த சில நாட்களாக மனமுடைந்து சோர்வுடன் காணப்பட்ட சுபாஷ், நேற்று சக மாணவர்கள் கல்லூரிக்கு சென்ற நிலையில் தனியாக அறையில் இருந்தார்.
மாலையில் சக மாணவர்கள் திரும்பி வந்து பார்த்தபோது, பெட்ஷீட்டை மின் விசிறியில் மாட்டி தூக்கில் தொங்கிய நிலையில் சுபாஷ் பிணமாக கிடந்தார். தகவலறிந்து வடவள்ளி போலீசார் வந்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சுபாஷ் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்று போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.