ஆவடி: ஆவடி அருகே திருநின்றவூரில் காதல் மனைவி கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்ற சோகத்தில் கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆவடி அடுத்த திருநின்றவூர், நடுக்குத்தகை, ராமதாசபுரத்தைச் சேர்ந்தவர் சந்தோஷ்(22). இவரது மனைவி பிரியா(20). இவரும் கடந்த ஓராண்டுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். சந்தோஷ் தனது வீட்டின் அருகே கோழி இறைச்சிக் கடை வைத்து வியாபாரம் செய்து வந்தார். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு சந்தோஷ், பிரியா இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, பிரியா பிரிந்து சென்றுவிட்டாராம்.
இதனால் மனவேதனை அடைந்த சந்தோஷ் நேற்று முன்தினம் தனது வீட்டின் படுக்கை அறையில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த திருநின்றவூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சந்தோஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.