விருதுநகர்: மேலும் 1.48 லட்சம் பேருக்கு ஜூலை 15-ம் தேதி முதல் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அடுத்த பி.புதுப்பட்டியில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேசினார். அப்போது பல்வேறு காரணங்களால் விடுபட்டுள்ள 1.48 லட்சம் பேருக்கு ஜூலை 15 முதல் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என அவர் கூறினார்.