மதுரை: மதுரையில் ரூ.2 கோடி கேட்டு கடத்தப்பட்ட 14 வயது பள்ளி மாணவன் 3 மணி நேரத்தில் மீட்கப்பட்டார். எஸ்எஸ் காலனியில் இருந்து ஆட்டோவில் பள்ளி சென்ற மாணவரை கடத்தி அவரது தாயாரிடம் ரூ.2 கோடி கேட்டு மிரட்டல் விடுத்தனர். ஆட்டோ ஓட்டுனருடன், மாணவரை கடத்திய கும்பல் அவரது தாயார் மைதிலியை தொடர்பு கொண்டு ரூ.2 கோடி கேட்டது. ரூ.2 கோடி தராவிட்டால் சிறுவனை கொன்று விடுவதாகவும், போலீசுக்கு போனாலும் கண்டுபிடிக்க முடியாது என மிரட்டல் விடுத்தனர். எஸ்எஸ் காலனி போலீசில் மைதிலி புகார் தந்ததால் கடத்திய 7ஆம் வகுப்பு மாணவரை 4 வழிச்சாலையில் இறக்கிவிட்டு கும்பல் தப்பியது.