சென்னை: ரூ.4 கோடி பறிமுதல் வழக்கில் பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகரிடம் சிபிசிஐடி போலீஸ் துருவித் துருவி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜரான பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து சிபிசிஐடி அலுவலகத்தில் எஸ்.ஆர்.சேகர் ஆஜரானார். ஏற்கனவே கோவையில் உள்ள எஸ்.ஆர்.சேகர் வீட்டில் சிபிசிஐடி போலீசார் சோதனை நடத்தியிருந்தனர். கடந்த ஏப்.6-ம் தேதி தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.