சென்னை: கள்ளக்குறிச்சி அருகே கனியாமூர் பள்ளி மாணவி மரண வழக்கு ஆகஸ்ட் 7ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மனுதாரரான பள்ளி மாணவியின் தாயார் செல்வி தாக்கல் செய்த மனு மீது அரசு தரப்பில் ஆட்சேபனை மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆட்சேபனை மனுவை அரசு தாக்கல் செய்த நிலையில் கள்ளக்குறிச்சி குற்றவியல் கோர்ட் வழக்கை ஒத்திவைத்தது.