டெல்லி: விவாகரத்து பெற்ற முஸ்லீம் பெண்கள் ஜீவனாம்சம் கோர முடியும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. விவாகரத்து பெற்ற முஸ்லீம் பெண்ணுக்கு ஜீவனாம்சம் வழங்க உத்தரவிட்டதை எதிர்த்து முஸ்லீம் ஆண்கள் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர். மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, ஏ.ஜி.மசி அமர்வு உத்தரவு அளித்துள்ளது. சிஆர்பிசி 125-ஆவது பிரிவு திருமணமான பெண்களுக்கு மட்டுமல்லாது, அனைத்து பெண்களுக்கும் பொருந்தும் என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.