சென்னை : சென்னை மாகாண முன்னாள் முதலமைச்சர் பனகல் அரசரின் பிறந்தநாளை ஒட்டி அவருக்கு அமைச்சர் உதயநிதி புகழாரம் சூட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில்,”பனகல் அரசர் பற்றிய பள்ளிப் பாடத்தை படித்தே முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் சுயமரியாதைபாதையை தேர்வு செய்தது வரலாறு.தமிழ்நாட்டின் பல முற்போக்கு திட்டங்களுக்கும் – சட்டங்களுக்கும் முன்னோடியாக திகழ்ந்த பனகல் அரசரின் புகழைப் போற்றுவோம்,”இவ்வாறு தெரிவித்துள்ளார்.