சென்னை: வெளிமாநில பதிவெண் ஆம்னி பேருந்துகளை தமிழ்நாட்டில் இயக்க அனுமதி கோரிய வழக்கில் அரசு பதில் தர உத்தரவிடப்பட்டுள்ளது. ரிட் மனுக்கள் மீது பதில் அளிக்க தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளை தமிழ்நாட்டில் இயக்க அரசு தடை விதித்திருந்தது. அதற்கு எதிரான மனுவை விசாரித்திருந்த உச்சநீதிமன்ற அரசின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்திருந்தது.