சென்னை: ஏழை மாணவர்கள் இளங்கலை படிப்புகளில் சேர்ந்து பயன்பெறும் வகையில், சென்னை பல்கலைக்கழகத்தில் கடந்த 2011ம் கல்வி ஆண்டு முதல் இலவச கல்வி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் வரும் 2024-25ம் கல்வியாண்டில் சென்னை பல்கலைக்கழகத்தின் இணைப்பு அங்கீகாரம் பெற்ற அரசு உதவி பெறும் கல்லூரிகள், தனியார் சுயநிதி கல்லூரிகளில் இளங்கலை படிப்புகளில் சேர பிளஸ் 2 முடித்த ஏழை மாணவர்களுக்கான விண்ணப்பப் பதிவு கடந்த பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான நாள் தொடங்கப்பட்டது. அதன்படி 219 மாணவ, மாணவிகள் இந்த திட்டத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு சென்னை பல்கலைக்கழக பதிவாளர் ஏழுமலை அவர்களுக்கான சேர்க்கை ஆணையை நேற்று வழங்கினார்.