தேன்கனிக்கோட்டை, ஜூலை 5: தேன்கனிக்கோட்டை அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் பிளஸ்1 படித்து வந்தார். கடந்த 30ம் தேதி வீட்டிலிருந்த மாணவி மாயமானார். இதையடுத்து அவரது பெற்றோர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து அண்ணா நகரைச் சேர்ந்த கார்த்திக் என்ற வாலிபர், தனது மகளை கடத்தி சென்றதாக, தேன்கனிக்கோட்டை போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பள்ளி மாணவி மாயம்; வாலிபர் மீது புகார்
previous post