ஊத்தங்கரை, ஜூலை 4: கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த எம்.வெள்ளாளப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராஜசேகர் மகன் கோகுல்(27). இவர் நேற்று முன்தினம், அந்த பகுதியில் உள்ள தண்ணீரில்லாத 40அடி ஆழம் கொண்ட கிணற்றின் அருகே நடந்து சென்றபோது, எதிர்பாராத விதமாக கிணற்றினுள் தவறி விழுந்தார். இதை கண்ட அங்கிருந்தவர்கள் அவரை காப்பாற்ற முயன்றனர். ஆனால், முடியாததால் ஊத்தங்கரை தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடம் வந்த தீயணைப்பு துறையினர், கிணற்றில் விழுந்த கோகுலை, சுமார் அரை மணி நேரத்திற்கும் மேல் போராடி, கயிறு மூலம் உயிருடன் மீட்டனர். அவருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டிருந்தது. அதற்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்து ஊத்தங்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.
கிணற்றில் தவறி விழுந்த வாலிபர் உயிருடன் மீட்பு
previous post