கிருஷ்ணகிரி, ஜூலை 4: பாகலூர் சூடாப்புரம் பகுதியைச் சேர்ந்த 16வயது சிறுமி, கிருஷ்ணகிரி அருகே போலுப்பள்ளியில் உள்ள உண்டு உறைவிட பள்ளியில் தங்கி, குந்தாரப்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். கடந்த 26ம் தேதி பள்ளிக்கு சென்ற சிறுமி, மீண்டும் உண்டு உறைவிட பள்ளிக்கு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சிறுமியை பல இடங்களில் தேடியபோது, அவர் எங்கும் கிடைக்கவில்லை. பின்னர் இதுகுறித்து கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தனர். அதில், தங்களது மகளை சூடாப்புரம் பகுதியை சேர்ந்த ரவி(23) என்பவர் கடத்தி சென்றிருக்கலாம் என்ற சந்தேகம் இருப்பதாகவும், அவரை மீட்டு தரவேண்டும் எனவும் தெரிவித்திருந்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிளஸ்1 மாணவி கடத்தல் வாலிபர் மீது புகார்
previous post