தஞ்சை: திருவிடைமருதூர் அருகே பயங்கர அதிர்வலைகளை ஏற்படுத்தும் வெடிச்சத்தம் கேட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கதிராமங்கலம், பந்தநல்லூர், கஞ்சனூர், தியாகராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பயங்கர வெடிச்சத்தம் கேட்டுள்ளது. வெடிச்சத்தம் எங்கிருந்து வந்தது என போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், திடீர் சத்தத்தால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.