சீர்காழி அருகே 3 சகோதரர்களை அரிவாளால் வெட்டிய வழக்கில் முக்கிய குற்றவாளிகள் 2 பேர் கைது செய்யப்பட்டனர். தந்தையை தாக்கியதால் நண்பர்கள் உதவியுடன் திட்டம் போட்டு 3 சகோதரர்களையும் தனையன்கள் வெட்டியுள்ளனர். ஏற்கெனவே 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், அருண் மற்றும் செந்திலையும் போலீசார் கைது செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை சேர்ந்த மதன், சுரேஷ், மணிகண்டன் உள்ளிட்ட 3 பேரை கடந்த 27ம் தேதி அன்று பிடாரி தெற்கு வீதி அருகே 7 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டி தப்பி சென்றது. இது தொடர்பாக சீர்காழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையில் அப்பா ரவி நடத்திவரும் பெட்டிக்கடையில் மகன் பொருட்கள் வாங்கும்போது ஏற்பட்ட தகராறில் முன்விரோதம் காரணமாக அருண், செந்தில், கட்டராஜா, விக்னேஷ், வினோத், குற்றாலீஸ்வரன், கோபால் ஆகிய 7 பேர் மதன், சுரேஷ், மணிகண்டன் உள்ளிட்ட 3 பேரை அரிவாளால் வெட்டியது தெரியவந்தது.
இதையடுத்து தலைமறைவான குற்றவாளிகளை தனிப்படை அமைத்து போலீசார் தேடி வந்த நிலையில் நேற்று முன்தினம் வினோத், குற்றாலீஸ்வரன், விக்னேஷ், கட்டராஜா ஆகியோரை போலீசார் கைது செய்திருந்தனர். இந்நிலையில் முக்கிய குற்றவாளியான அருண்மற்றும் செந்தில் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.