கரூர்: நில மோசடி வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீண்டும் முன்ஜாமின் கேட்டு மனு தொடர்ந்துள்ளார். எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு மீதான விசாரணையை நாளை மாலைக்கு ஒத்திவைத்து கரூர் மாவட்ட முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே முன் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் முன்ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார். ரூ.100 கோடி நில மோசடி புகாரில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது 6 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.