டெல்லி: அம்பாலாவில் இருந்து டெல்லி சென்றுகொண்டிருந்த சரக்கு ரயிலின் 8 பெட்டிகள் தண்டவாளத்தில் கவிழ்ந்துள்ளன. அரியானா மாநிலம் கர்னல் மாவட்டத்துக்கு சரக்கு ரயில் வந்தபோது பெட்டிகள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. சரக்கு ரயில் பெட்டிகள் கவிழ்ந்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெறுவதாக ரயில்வே அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.