சென்னை: சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் பதவி நீட்டிப்புக்கு ஜவாஹிருல்லா கண்டனம் தெரிவித்துள்ளார். ஊழல் உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியவருக்கு ஆளுநர் பணி நீட்டிப்பு வழங்கியது ஏற்கத்தக்கதல்ல. போலி ஆவணம் தயாரித்து தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்ததாக ஜெகநாதன் மீது கடும் குற்றச்சாட்டுகள் உள்ளன என்றும் தெரிவித்தார்.