திருச்சி, ஜூலை 2: திருச்சியில் மாயமான பைக்கை போலீசார் தேடுகின்றனர். திருச்சி கே.கே.நகர் கிருஷ்ணமூர்த்தி நகர் விரிவாக்கத்தை சேர்ந்தவர் சஞ்சத் முகமது(41). இவர் கடந்த 16ம் தேதி வீட்டு வளாகத்தில் இருசக்கர வாகனத்தை நிறுத்தி வைத்திருந்தார். மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது இருசக்கர வாகனத்தை காணவில்லை. பல்வேறு இடங்களில் ேதடி பார்த்தும் கிடைக்கவில்லை. இதுகுறித்து கே.கே.நகர் போலீசார் வழக்குப்பதிந்து இருசக்கர வாகனத்தை திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
டூவீலர் திருட்டு
previous post