காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் தலைமையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து 548 மனுக்களை பெற்றார்.
அப்போது, அவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். பின்னர், மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அனைத்துத்துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இதில், மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜெயக்குமார், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.