சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று வெளியிட்ட அறிக்கை: பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஜெகநாதனின் மூன்றாண்டு கால பதவிக் காலம் கடந்த 30ம் தேதியுடன் நிறைவடைகிறது. சென்னை உயர்நீதிமன்றத்தில் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ள, அரசு செயலர் விசாரணை அறிக்கையில் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்ட பெரியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஜெகநாதனுக்கு தமிழக ஆளுநர் ஓராண்டு பதவி நீட்டிப்பு வழங்கி இருப்பது உயர்கல்வியின் மாண்புக்கும், மரபுக்கும் எதிரானதாகும். எனவே அந்த பணி நீட்டிப்பை ஆளுநர் உடனே ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.