தூத்துக்குடி: ஒன்றிய அரசின் 3 புதிய குற்றவியல் சட்டங்களை அமல்படுத்த தடை விதிக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தூத்துக்குடியைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்தி, சமஸ்கிருதம் தெரியாத வழக்கறிஞர்கள், நீதிபதிகளுக்கு இந்த சட்டங்கள் பாதிப்பை ஏற்படுத்தும். இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஆங்கிலத்தில் மட்டுமே சட்டங்கள் இயற்ற அதிகாரம் வழங்குகிறது.