சென்னை: தமிழ்நாட்டில் 99% காவல் நிலையங்களில் சிசிடிவி பொருத்தப்பட்டு, பதிவுகள் பத்திரப்படுத்தப்பட்டுள்ளன என்று தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்துள்ளது. காவல் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தக்கோரி சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் நிஜாமுதீன் என்பவர் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.