பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் 5 தமிழக வீரர்களுக்கு தலா ரூ. 7 லட்சம் ஊக்கத்தொகையை முதலமைச்சர். மு.க. ஸ்டாலின் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர்.உதயநிதி ஸ்டாலின், தலைமைச் செயலாளர். சிவ் தாஸ் மீனா இ.ஆ.ப., இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர். அதுல்ய மிஸ்ரா. இ.ஆ.ப., தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர்.ஜெ.மேகநாத ரெட்டி, இ.ஆப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.