உதகை: கோடை சீசன் நிறைவடைந்ததை அடுத்து சினிமா படப்பிடிப்புக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது. தாவரவியல் பூங்கா உள்பட 7 முக்கிய சுற்றுலா தலங்களில் படப்பிடிப்பிற்க்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது. தோட்டகலை துறைக்கு சொந்தமான பூங்காக்களில் படப்பிடிப்பு நடத்த அனுமதி தேவைப்படுவோர் அணுகலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.