Tuesday, October 1, 2024
Home » திருவள்ளூர் மத்திய மாவட்டம் சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வெள்ளி செங்கோல் பரிசளிப்பு: அமைச்சர் நாசர் வழங்கினார்

திருவள்ளூர் மத்திய மாவட்டம் சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வெள்ளி செங்கோல் பரிசளிப்பு: அமைச்சர் நாசர் வழங்கினார்

by kannappan

ஆவடி: திருத்தணியில் நடந்த மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் உதவி வழங்கும் விழாவில் பங்கேற்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக சார்பில் மாவட்ட செயலாளரும், பால்வளத்துறை அமைச்சருமான ஆவடி சா.மு.நாசர் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும், அவருக்கு நினைவு பரிசாக வெள்ளி செங்கோல் வழங்கப்பட்டது. மாநில அளவில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் உதவி, மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திருத்தணி கண்டிகையில் உள்ள தனியார் கல்லூரியில் நேற்று  நடைபெற்றது. இதில் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு ரூ3 ஆயிரம் கோடிக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த விழாவுக்கு அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் தலைமை வகித்தார். நிர்வாகிகள் திருவள்ளூரில் தாரை, தப்பட்டை முழங்க சிறப்பான வரவேற்பு அளித்தனர். அப்போது, அவருக்கு நிர்வாகிகள் பூங்கொத்து, சால்வைகள் கொடுத்தனர். பின்னர், அவரை நிர்வாகிகள் ஊர்வலமாக விழா மேடை வரை அழைத்துச்சென்றனர். தொடர்ந்து, அங்கு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் நாசர் நினைவு பரிசாக வெள்ளி செங்கோலை வழங்கினார். இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் ஆ.கிருஷ்ணசாமி எம்எல்ஏ, மாநில மாணவரணி இணை செயலாளர் பூவை சி.ஜெரால்டு, மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள் நடுகுத்தகை கே.ஜெ.ரமேஷ், காயத்ரி தரன், ம.ராஜி,  எஸ்.ஜெயபாலன்,  பா.நரேஷ்குமார், த.எத்திராஜ், வி.ஜெ.சீனிவாசன், பதாகை வி.சிங்காரம், ஆர்.எஸ்.ராஜராஜன், வக்கீல் கு.சேகர், எல்லாபுரம் எம்.குமார்,  ஜி.விமல்வர்சன், ஜெ.மகாதேவன், ஒன்றிய, மாநகர, நகர, பேரூர் செயலாளர்கள் டி.தேசிங்கு பூவை.ஜெயக்குமார், காக்களூர் ஜெயசீலன், தங்கம் முரளி, புஜ்ஜி ராமகிருஷ்ணன், ஜி.ராஜேந்திரன், வி.பேபி சேகர், ஜி.நாராயணபிரசாத், பொன்.விஜயன், என்.இ.கே.மூர்த்தி, பூவை ரவிக்குமார், தி.வை.ரவி, திருமழிசை வே.முனுசாமி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பிரபு கஜேந்திரன், சார்பு அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.  …

You may also like

Leave a Comment

6 − three =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi