தேனி: ஆந்திராவில் இருந்து தேனிக்கு கடத்தி வரப்பட்ட 22 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். ஆண்டிபட்டி பகுதிக்கு கஞ்சா கடத்தி வரப்படுவதாக போலீசுக்கு கிடைத்த தகவலை அடுத்து சோதனை நடத்தினர். சோதனையில் ஆட்டோவில் கஞ்சா பார்சல்களை மாற்ற முயன்ற மாயன், வனராஜா, சத்யராஜ் ஆகியோர் கைது. கஞ்சா கடத்தலில் தொடர்புடைய முருகன், ரமணா ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.