சென்னை: திராவிடத் தமிழர் கட்சித் தலைவர் வெண்மணி இணையர் சாவித்ரி மறைவுக்கு திமுக தலைவர், முதல்வருமான மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து திமுக தலைவர், முதல்வருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் அறிக்கையில்: திராவிடத் தமிழர் கட்சித் தலைவர் வெண்மணி இணையர் சாவித்ரி மறைந்தார் என்ற செய்தியறிந்து மிகவும் வருந்தினேன்.
மனைவியின் பிரிவால் வாடும் தோழர் வெண்மணி அவர்களுக்கும், அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு திமுக தலைவர், முதல்வருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.