தமிழக சட்டப் பேரவையில் நேற்று கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்த பின்பு அமைச்சர் ஆர்.காந்தி வெளியிட்ட அறிவிப்புகள்:
* கைத்தறி நெசவாளர் கூட்டுறவுச் சங்கங்களில் உள்ள நெசவாளர்களுக்கு வழங்கப்படும் கூலியில் 10 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படும்.
* 3000 கைத்தறி நெசவாளர்களுக்கு ரூ.3 கோடி தறிகள் மற்றும் தறி உபகரணங்கள் வழங்கப்படும்.
* கைத்தறித் துணிகளின் விற்பனையினை அதிகரிக்க, சென்னை தீவுத்திடலில் ஒரு தேசிய அளவிலான கைத்தறிக் கண்காட்சி ரூ.2 கோடியில் 4 மாநில அளவிலான சிறப்பு கைத்தறிக் கண்காட்சிகள் ரூ.1.20 கோடி செலவிலும் நடத்தப்படும்.
* 2000 கைத்தறி நெசவாளர்கள் பயன்பெறும் வகையில் தேசிய ைகத்தறி வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 10 புதிய கைத்தறிக் குழுமங்கள் ரூ.20 கோடியில் உருவாக்கப்படும் உள்ளிட்ட பல அறிவிப்புகளை வெளியிட்டார்.