திருத்தணி: திருவள்ளூர் மாவட்டம் அம்மையார்குப்பம் காலனியைச் சேர்ந்தவர் ராஜ்குமார்(34). கட்டிட மேஸ்திரி. அவரது மனைவி பொன்னுத்தாய் தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், கடந்த 16ம் தேதி முதல் தனது மகளைக் காணவில்லை என்று சிறுமியின் தந்தை ஆர்.கே. பேட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீஸ் இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம் நடத்திய விசாரணையில் மாயமான சிறுமியை கட்டிட மேஸ்திரி ராஜ்குமார் ஆசை வார்த்தைகள் கூறி தன்னுடன் அழைத்து சென்றது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து, சிறுமியை மீட்ட போலீசார், ராஜகுமாரை போஸ்சோ சட்டத்தின் கீழ் நேற்று கைது செய்தனர்.
சிறுமிக்கு பாலியல் தொல்லை: மேஸ்திரி போக்சோவில் கைது
previous post