நெல்லை: கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாகவும், தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தியும் நாம் தமிழர் கட்சி சார்பில் நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பாளை. சட்டமன்ற தொகுதி செய்தி தொடர்பாளர் வண்ணை கணேசனுக்கு திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.