டெல்லி: மோடி ஆட்சியில் நாடு முழுவதும் அரசியல் சட்டமும் ஜனநாயகமும் நொறுக்கப்படுவதாக ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் குற்றம் சாட்டியுள்ளார். அரசு எழுதிக் கொடுத்து ஜனாதிபதி ஆற்றும் உரையில் ஜனநாயகம், அரசியல் சட்டம் பற்றி பெரிதாக பேசுவார்கள். எனினும் உண்மையில் நாட்டில் ஜனநாயகமும் அரசியல் சட்டமும் சிதைக்கப்படுவதாக ஆம் ஆத்மி கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.