சென்னை: சென்னையில் நடைபெற்றுவரும் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு தேமுதிக ஆதரவு அளித்துள்ளது. எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தார் பிரேமலதா. சட்டப்பேரவையில் அதிமுக எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை கண்டித்து உண்ணாவிரதம் நடைபெற்று வருகிறது.