ராமேஸ்வரம்: இலங்கை கடற்படை ரோந்து கப்பல் கடந்த 24ம் தேதி கொழும்பில் இருந்து 222 கி.மீ. தொலைவில் நடுக்கடலில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தது. அப்போது சென்ற உள்ளூர் இழுவை படகை மறித்து சோதனை செய்ததில், படகில் 191 கிலோவுக்கு அதிகமான ஹெராயின் மற்றும் கிரிஸ்டல் மெத்தம்பேட்டமைன் பார்சல்களை பறிமுதல் செய்தனர். இதன் சர்வதேச மதிப்பு ₹300 கோடி. கடத்தலில் ஈடுபட்ட இலங்கையை சேர்ந்த 6 பேரும் கைது செய்யப்பட்டனர்.