சென்னை: நெல் கொள்முதலுக்கான ஊக்கத் தொகை அதிகரிப்பு என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ஊக்கத்தொகையாக ரூ.130 வழங்கப்படும் எனவும் 2024-25 குறைந்தபட்ச ஆதார விலையுடன் காரீப் கொள்முதல் பருவத்துக்கு சாதாரண நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.105 ஊக்கத் தொகை வழங்கப்படும் எனவும் முதல்வர் அறிவித்துள்ளார். விவசாயிகளிடம் இருந்து சாதாரண நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,405 என்று கொள்முதல் செய்யவும் சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2500 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யவும் முதல்வர் ஆணையிட்டுள்ளார்.