கோவில்பட்டி, ஜூன் 22: கோவில்பட்டி அருகே உள்ள இனாம்மணியாச்சியைச் சேர்ந்தவர் லெட்சுமண பெருமாள் (52). இவர், இனாம்மணியாச்சி பைபாஸ் ரோட்டில் மளிகை கடை வைத்துள்ளார். இவரது கடைக்கு அதேபகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் மாரிமுத்து மகன் மகேந்திரன் (27) என்பவர் அடிக்கடி வந்து பொருட்கள் வாங்கிச்செல்வார். இந்நிலையில் அவர், கடனுக்கு பொருட்கள் கேட்டதாக தெரிகிறது. அதற்கு லெட்சுமண பெருமாள், ‘ஏற்கனவே உள்ள கடனை கொடுத்து விட்டு பொருட்கள் வாங்கிச்செல்லும்படி’ கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மகேந்திரன், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் லெட்சுமண பெருமாளை சரமாரியாக வெட்டினார். பலத்த காயமடைந்த அவர், கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேல்சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுதொடர்பாக கோவில்பட்டி மேற்கு காவல்நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. எஸ்ஐ செந்தில்குமார் விசாரணை நடத்தி மகேந்திரனை கைது செய்து கோவில்பட்டி ஜே.எம்.2 கோர்ட்டில் ஆஜர்படுத்தினார். அவரை 15 காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து மகேந்திரனை, கோவில்பட்டி கிளைச்சிறையில் அடைத்தனர்.
கோவில்பட்டி அருகே மளிகை கடைக்காரருக்கு சரமாரி வெட்டு
previous post