சென்னை: 4 மாவட்டங்களில் தரைகீழ் தடுப்பணைகள் அமைக்கும் பணி ரூ.103.23 கோடியில் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் துரைமுருகள் அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் நேற்று நீர்வளத்துறை மானியகோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்து 11 அறிவிப்புகளை அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டார்.முக்கிய அறிப்புகள் பின்வருமாறு:
முக்கிய ஆறுகளில் வெள்ளக் காலங்களில் கிடைக்கும் நீரை சேமித்து, நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தவும், வெள்ளநீரின் தீவிரத்தை கட்டுப்படுத்தவும், 7 மாவட்டங்களில் 10 இடங்களில் தடுப்பணைகள் அமைக்கும் பணி ரூ.71.86 கோடியில் மேற்கொள்ளப்படும்.
7 மாவட்டங்களில் 10 இடங்களில் அணைக்கட்டுகள் மற்றும் பகிரணைகள் அமைக்கும் பணி ரூ.55.36 கோடியில் மேற்கொள்ளப்படும்.
கடலூர் மற்றும் மயிலாடுதுறை, திருவண்ணாமலை, திருவாரூர் மாவட்டங்களில் 3 இடங்களில் தரைகீழ் தடுப்பணைகள் அமைக்கும் பணி ரூ.103.23 கோடியில் மேற்கொள்ளப்படும்.
சிவகங்கை மாவட்டத்தில் முன்னாள் ஜமீன் கண்மாய்களான 7 குறு பாசன கண்மாய்களைப் புனரமைக்கும் பணி ரூ.4.97 கோடியில் மேற்கொள்ளப்படும்.
காளிங்கராயன் அணைக்கட்டு மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பழவூர் அணைக்கட்டுகளைப் புனரமைப்பு செய்யும் பணி ரூ.3.7 கோடியில் மேற்கொள்ளப்படும்.
நவீன நில அளவை கருவிகளை கொண்டு எல்லைக் கற்கள் நடும் பணி ரூ.35 லட்சத்தில் மேற்கொள்ளப்படும்.