புதுடெல்லி: மூத்த காங்கிரஸ் தலைவரும் எம்பியுமான ப.சிதம்பரம் நேற்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை சந்தித்து பேசினார். மேற்கு வங்க அரசு தலைமை செயலகத்தில் இந்த சந்திப்பு நடந்தது. இதுகுறித்து வட்டாரங்கள் கூறுகையில், இரு தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பு சுமார் 30 நிமிடங்கள் வரை நடந்தது. இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்றும் நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமை குறித்து இருவரும் பேசினர் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.