சென்னை: கள்ளக்குறிச்சி சம்பவத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ரூ.50,000 வழங்கப்படும். விஷச் சாராயம் தயாரிக்க மெத்தனால் வழங்கியவர்களை கண்டறிந்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் உறுதியளித்துள்ளார்.